by Vignesh Perumal on | 2026-04-03 09:09 PM
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3, 2026) வெளியாகியுள்ள நிலையில், கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது நெருக்கமான ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, இன்று முதற்கட்டமாக 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் மத்திய அமைச்சர் எல். முருகன் (அவினாசி), தமிழிசை சவுந்தரராஜன் (மயிலாப்பூர்), வானதி சீனிவாசன் (கோவை வடக்கு) மற்றும் நயினார் நாகேந்திரன் (சாத்தூர்) போன்ற மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்களாகவும், சமூக வலைதளங்களில் கட்சிப் பணிகளை முன்னெடுத்தவர்களாகவும் அறியப்பட்ட கீழ் கண்டவர்களுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கே. அண்ணாமலை, முன்னாள் மாநிலத் தலைவரான இவர், இம்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. "கட்சித் தொண்டனாக அனைத்து வேட்பாளர்களுக்காகவும் பணியாற்றுவேன்" என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவரது பெயர் பட்டியலில் இல்லாதது அவரது ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமர்பிரசாத் ரெட்டி, அண்ணாமலையின் நிழலாக வலம் வந்த இவர், கடந்த ஒரு மாதமாகத் தனது பிரச்சார வாகனத்தை நவீன வசதிகளுடன் தயார் செய்து வைத்துள்ளார். "தமிழகம் காக்கப் புறப்படுவோம்" என்ற வாசகங்களுடன் தயாரான வாகனம் இப்போது வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஜி. சூர்யா, கட்சியின் மாநிலச் செயலாளரான இவருக்கு ஏதேனும் ஒரு தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வினோஜ் பி. செல்வம், கடந்த முறை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட இவருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அமர்பிரசாத் ரெட்டிக்கு ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்பினர். இதற்காக அவர், பிரச்சாரத்திற்காகச் சிறப்பு 'கேரவன்' வாகனத்தை ஒரு மாதத்திற்கு முன்பே வடிவமைத்தார். தொகுதிகளில் பூத் கமிட்டி பணிகளை முன்கூட்டியே முடுக்கிவிட்டிருந்தார்.
தற்போது வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால், அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் நோக்கர்கள் இந்தக் கட்டாய விடுப்புக்கு இரண்டு முக்கியக் காரணங்களைக் கூறுகின்றனர்: அதிமுக தரப்பில் சில குறிப்பிட்ட பெயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகவும், கூட்டணி தர்மத்திற்காகப் பாஜக தலைமை அவர்களைத் தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் 'பழைய கார்டுகளுக்கு' அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், அண்ணாமலை டீம் ஓரங்கட்டப்படுவதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது.
அண்ணாமலை இம்முறை தேர்தலில் போட்டியிடாமல், மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட மேலிடம் உத்தரவிட்டுள்ளது. "தன்னை விடக் கட்சி தான் முக்கியம்" என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சட்டசபை தேர்தலில் போட்டி - திருமா போட்ட கணக்கு ! பின்னணி என்ன.?
இன்சியல் - அப்பா யார் என்பது தேவையில்லை ! கோர்ட் அதிரடி !!
10/10 அமைச்சர் மூர்த்திக்கு இலக்கு ! ஸ்டாலின் வைத்த செக்! !
கிணற்றில் விழுந்த பேரன், பேத்தி..! பாட்டி செய்த செயல்...! மூவரும் பலி..!