by Muthukamatchi on | 2025-03-18 07:02 PM
எரியோடு அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்திய முதியவர் - சிறுவன் மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு செல்லும் வழியில் தங்கராஜ்(65) என்ற முதியவர் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தனால் சிறுவனுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது இதனை கவனித்த பள்ளி ஆசிரியர் மாணவனை அன்புடன் அழைத்து பேசி விசாரணை மேற்கொண்ட போது இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்தது இதைத்தொடர்ந்து ஆசிரியர் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மோகன் கணேஷ் திண்டுக்கல்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!