by admin on | 2025-03-17 08:19 PM
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம், தேனி வட்டம், தேனி பங்களா மேட்டில் அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா எனும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று 17.03.2025 காலை 9.26 முதல் 10.26 மணி வரை நடைபெற்றது. விழாவில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை துணைத் தலைவர் கணேஷ், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கே. கே. ஜெயராம், வித்யா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி துணைச் செயலாளர் திரு. மூர்த்தி ஆகியோர் அன்புடன் வரவேற்று, சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
நிகழ்வுக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
கோவில் நிர்வாகஸ்தர்கள் மற்றும் உறவின்முறை நிர்வாகஸ்தர்கள் விழா சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தனர்.நிகழ்வின் முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள்:
மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் இணை அமைப்பாளர் செல்வ பாண்டியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிபிரபு தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டியன் நகர செயலாளர் அழகுபாண்டி நகர துணைச் செயலாளர் – ஏழுமலையான், சுரேஷ் ராமகிருஷ்ணன்
செயற்குழு உறுப்பினர் – EB. மணிகண்டன்
பூஜாரி பேரவை நகர அமைப்பாளர் கோவிந்தராஜ் சுவாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!