by Muthukamatchi on | 2025-03-16 03:09 AM
அருள்மிகு ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்,இந்தியா முழுவதும், ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி ஆஞ்சநேயர், ஹனுமான்ஜி, மாருதி, பஜ்ரங் பாலி, மஹாவீர், பவன் குமார் என பல பெயர்களால் வழிபடப்படுகிறார். அவர் வாயு தேவனுக்கும், அஞ்ஞனா தேவிக்கும் மகனாக அவதரித்தார். இவர் ஏழு சிரஞ்ஞீவி (இறவா நிலை) களில் ஒருவர். சூரியத் தேவனே இவரது ஆசான் ஆவார். வால்மீகி இராமாயணத்தில் சுந்தர காண்டம் என்ற தனி அத்தியாயத்தில், ஆஞ்சநேயர் அன்னை சீதாபிராட்டியை கடல் கடந்து தேடும் போது நிகழ்த்திய லீலைகளைப் பற்றி மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.சுந்தர காண்டம் 2885 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. சமஸ்கிருத வார்த்தையான சுந்தர என்பதற்கு தமிழில் அழகான என்று பொருள். இராமாயணத்தில், சுந்தர காண்டத்தின் மகிமை மிகவும் முக்கியமானதாகும். கடலானது சம்சார சாகரத்தைக் பிரதிபலிக்கிறது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், பரமாத்மாவையும், பூமா தேவியின் அம்சமான சீதாபிராட்டியையும், ஜீவாத்மாவுடன் ஒப்பிட்டு கூறுகிறார். ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமியை குரு அல்லது தெய்வீக ஆசிரியராக குறிப்பிடுகிறார்.
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!
தேர்தல் பறக்கும் படை அதிரடி...! விதிமீறல்...! ரூ.96,500 பறிமுதல்...!