by Satheesh on | 2025-03-15 09:47 PM
தேனி : பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, 10ம் வகுப்பில் படிப்பில் பின் தங்கிய 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில், பெற்றோர்களின் அனுமதியுடன் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எல்லா பாடங்களுக்கும் சுழற்சி முறையில் தினமும் இரண்டு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இதனால் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பணியை அவர்கள் செய்து வருவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மாணவர்களும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைத்து, படிப்பை ஆர்வத்துடனும் கவனத்துடனும் பயின்று வருவதாக கூறுகின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ஆசிரியர்களின் ஆர்வத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!