by Satheesh on | 2025-03-13 07:46 PM
கேரள : இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உடுமலைப்பேட்டையில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற K S R T C பேருந்து விபத்துக்குள்ளானது. இரும்புபாலம் நகருக்கு முன்பாக சேரைப்பாலம் என்ற இடத்தில் வளைவில் திரும்ப முற்பட்ட போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி முதிரபுழையாற்றின் ஒரு பகுதியில் கவிழ்ந்தது.
டிரைவர் மற்றும் 2 பயணிகள் லேசான காயங்களுடன் அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி .