by admin on | 2025-11-17 07:44 PM
கேரளாவில் சில இடங்களில் 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது. இது மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது.
அதனால் கேரள சுகாதாரத்துறை சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது..ஆறுகளில் குளிக்கும் போது மூக்கிற்குள் நீர் செல்லாமல் கவனமாக இருக்க வேண்டும்ஏற்கனவே உள்ள பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அவற்றை தொடர்ந்து சாப்பிட வேண்டும்மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிப்பது அவசியம்சபரிமலை யாத்திரை புறப்படும் முன் நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்மலை ஏறும் போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் ஏற வேண்டும்கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும்.
என்று வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள, ஐயப்ப பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இறைபணியில் என்றும் அன்புடன் உங்கள் பூபாலன்....
தி. முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர். 9842337244.