by Satheesh on | 2025-03-09 02:09 PM
தேனி : பெரியகுளம் NHP 3 நெடுஞ்சாலை வாகன போலீசார், ரோந்து சென்றனர். அப்பொழுது, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், பழைய R T O ஆபீஸ் அருகில், வழி தவறி வந்த 2 காட்டுப்பன்றிகள் மற்றும் அதன் 9 குட்டிகளும் ரோட்டில் இறந்து கிடந்தன. அவைகள், சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம்? என கூறப்படுகிறது. ரோந்து வாகன சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலைப் பெற்ற தேவதானப்பட்டி வனத்துறையினர் காட்டுப் பன்றிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்று, இறப்பு குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!