by Satheesh on | 2025-03-09 02:09 PM
தேனி : பெரியகுளம் NHP 3 நெடுஞ்சாலை வாகன போலீசார், ரோந்து சென்றனர். அப்பொழுது, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், பழைய R T O ஆபீஸ் அருகில், வழி தவறி வந்த 2 காட்டுப்பன்றிகள் மற்றும் அதன் 9 குட்டிகளும் ரோட்டில் இறந்து கிடந்தன. அவைகள், சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம்? என கூறப்படுகிறது. ரோந்து வாகன சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலைப் பெற்ற தேவதானப்பட்டி வனத்துறையினர் காட்டுப் பன்றிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்று, இறப்பு குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!