by Muthukamatchi on | 2025-03-08 06:46 PM
திண்டுக்கல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூர் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் இவர் அதே பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெங்கடேசை பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரவிச்சந்திரன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!