| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

சுமை தூக்கும் தொழிலாளி கொலை...??? ஒருவர் கைது...!!!

by Muthukamatchi on | 2025-03-08 06:46 PM

Share:


சுமை தூக்கும் தொழிலாளி கொலை...??? ஒருவர் கைது...!!!

திண்டுக்கல் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்த ம.மு.கோவிலூர் அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் இவர் அதே பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெங்கடேசை பாறைப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி  ரவிச்சந்திரன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார்இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வெங்கடேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment