by Muthukamatchi on | 2025-03-08 06:37 PM
மாநிலம் முழுவதும் டூ வீலர் மற்றும் சிலிண்டர்கள் திருட்டு என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருட்டு தொடர்வாக போலீசார் வழக்கு பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர் மேல் விசாரணை மேற்கொள்வதில்லை. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அப்படி அல்ல திருட்டு குற்றவாளிகளை தேடி தேடி பிடித்து சிறைக்குத் தள்ளுவது முதன்மை காட்டி வருகின்றனர்.பழனி அருகே இருசக்கர வாகனம், கேஸ் சிலிண்டர் திருடிய பலே திருடனை கைது செய்து 8 இருசக்கர வாகனம், 10 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தனர். செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி, பழனி புறநகர், சத்திரப்பட்டி, சாமிநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டர்கள் திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதுஇதுகுறித்து எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் DSP. தனஞ்செயன் மேற்பார்வையில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பழனி, கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 இருசக்கர வாகனங்கள், 10 கேஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!