by satheesh on | 2025-03-07 07:29 PM
தேனி : பெரியகுளம் எல்ஐசி கிளையின் முன்பாக,மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு , பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்திடவும், பணியிடங்களிலும் பாலியல் வன்முறை தடுப்பு குழுக்கள் அமைவதை உறுதி செய்திடவும், 33 %இட ஒதுக்கீட்டை முறையாக அமுல்படுத்தவும் போன்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கிளைத் தலைவர் நாக பாண்டி வரவேற்றார். கிளைச் செயலாளர் சசிகுமார் கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். கிளை மகளிர் பொறுப்பாளர் சார்பாக ஷீலாதேவி அவர்கள் சிறப்பு விளக்கவுரையாற்றினார். மேலும், மகளிர் அனைவரும் சேர்ந்து தோழர்கள் அனைவருக்கும் இனிப்புகள்வழங்கப்பட்டு, மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்திற்கு பெரியகுளம் கிளையின் அனைத்து தோழர்களும் கலந்து சிறப்பித்தனர். நிறைவாக கிளை பொறுப்பாளர் கரந்தமலை நன்றி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு லிங்க் ஐ ஓபன் செய்து பாருங்கள்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.