by Muthukamatchi on | 2025-03-06 01:57 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி வனச்சராக பகுதிக்கு உட்பட்ட கெங்குவார்பட்டி மட்டமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. மட்டமலை அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளை சிறுத்தை தாக்கி வருவதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.எனவே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் அச்சத்தை போக்கி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.