by Muthukamatchi on | 2025-03-06 01:46 PM
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா .தேனிவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில், கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா நடந்தது .விழாவிற்கு கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்குமார் வரவேற்று பேசினார்.விழாவில் கல்லூரிக்கு இடையேயான மாணவ மாணவிகளுக்கு குழு நடனம், பாட்டுப்போட்டி ,ஊமை நாடகம், தொழில் திறன் வினாடி வினா, கழிவிலிருந்து கலைப் பொருள்கள் செய்தல் ,புகைப்படம் ,திறன் மேம்பாடு உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் தேனி ,மதுரை ,திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 27 கல்லூரிகளில் இருந்து ,ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி குழுமத் தலைவர் மோகன் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போடி ஏல விவசாய சங்க கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும் ,பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் வேல்ராஜன், கம்ப்யூட்டர் பயன்பாட்டு துறை தலைவர் உமா மகேஸ்வரி உட்பட நிர்வாகத்தினர் செய்திருந்தனர். படம் செய்தி பிரவின் ஆண்டிப்பட்டி தேனி
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!