by Muthukamatchi on | 2025-03-06 12:23 PM
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆண்டிபட்டி நகர பாரதியஜனதா கட்சி சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றதுஆண்டிப்பட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரத்த்தலைவர் மனோஜ்குமார் தலைமை தாங்கினார்தேனிமாவட்ட பிரச்சாரஅணி தலைவர் கண்ணன் , நகர பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்மாநில நெசவாளர் அணி தலைவர் கணேசன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்நிகழ்ச்சிகள் மதுரை தேனி சாலையில் சென்ற பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டதுமேலும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டதுஇந்த நிகழ்வில் ஆண்டிபட்டி நகர பாரதியஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்நகரத் துணைத்தலைவர் நீலமணி நன்றி கூறினார்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!