by admin on | 2025-03-02 06:53 PM
பழனி அருகே மகளிர் குழுவில் பணத்தை பெற்று கொண்டு தலைவி தலைமறைவு - ??? ஐந்து பெண்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதி.?? திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி 14 வது வார்டு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராதிகா என்பவர் மகளிர் குழு தலைவியாக உள்ளார் இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி(35) காந்தியம்மாள்(50) செண்பகம்(45) அன்னத்தாய்(55) சித்ராதேவி(37) என்ற பெண்களிடம் தனியார் வங்கியில் குழு பெயரில் பணம் பெற்றுள்ளார் இந்த பணத்தை மாதம் மாதம் பணத்தை நானே செலுத்தி கொள்கிறேன் என்று கூறி ஒவ்வொருத்தரும் பெயரிலும் 18 ஆயிரம் முதல் 70ஆயிரம் 1 லட்சம் என மூன்று லட்ச ருபாய் வரை பணத்தை பெற்று கொண்டு வீட்டை காலி செய்து விட்டு தப்பி சென்றால் மனமுடைந்த ஐந்து பெண்கள் சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு - ஆய்க்குடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நிருபர் பாஸ்கரன் தேனி.