by admin on | 2025-02-28 05:53 PM
சின்னமனூரில் மின்வாரிய அதிகாரிக்கு கொலை மிரட்டல் ......???
பணி ,உயிர் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் புகார்...!!!!
தேனி மாவட்டம் சின்னமனூர் மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றுபவர் யுகேஷ் குமார். மின் இணைப்பு சம்பந்தமாக சின்னமனூர்நகர் பிரிவிற்குட்பட்ட ஈஸ்வரி என்பவர் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அதில் ஆஜராகி விட்டு மின்வாரிய அதிகாரி யுகேஷ் குமார் தனது அலுவலகத்திற்கு வந்தபோது ஈஸ்வரியின் மகன் முத்துராசு என்பவர் செல்போன் மூலம் யுகேஷ் குமாரை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசியதாகவும் செல்போனில் கொலையும் மிரட்டல் விட்டதாகவும் கூறி அவர் மேல் உரிய நடவடிக்கையும் தனக்கு உரிய பாதுகாப்பும் வழங்கவும்,அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி சின்னமனூர் காவல் நிலையத்தில் யுகேஷ் குமார் அளித்த புகாரியின் பேரில் எஸ் ஐ சுல்தான் பாஷா வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.