by satheesh on | 2025-02-28 02:41 PM
காரைக்குடி : தேவகோட்டை நகரில் கடந்த பிப் 23ம் தேதி இரண்டு வீடுகள் உடைக்கப்பட்டு 56 பவுன் தங்க நகைகள், 2,85,000 ரொக்க பணம் போன்றவை காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடியை சேர்ந்த சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து நகைகள் பணம் மீட்பு , பைக் செல்போன் பறிமுதல், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட D S P கௌதம் தலைமையிலான காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.