by admin on | 2025-02-25 09:17 PM
பழனியில் தொடர் பேட்டரிகள் திருட்டில்ஈடுபட்ட அண்ணன் - தம்பி கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில்தொடர்ச்சியாகபேட்டரிகள்திருடுபோனது தொடர்பாக நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுகுறித்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பழனி நகர் பகுதியில் தொடர் பேட்டரிகள் திருட்டில் ஈடுபட்ட அண்ணன் திவாகர் தம்பி முகிலன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.