by admin on | 2025-02-21 06:33 PM
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம் சார்பில் மதுரைகோட்டம் தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் R.சிங்காரவேலு அவர்கள் தலைமையில் உலகத் தாய் மொழி நாள் உறுதி மொழி 21.02.2025 காலை 11.00 மணிக்கு
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டு வர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழிநாளானஇன்று உளமாறஉறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இதில் பணியாளர்கள் ,அலுவலர்கள் மற்றும் ஒட்டுனர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர்
தங்க சுரேஷ்
வாடிப்பட்டி மதுரை