by admin on | 2025-02-20 04:44 PM
தமிழகத்தில் ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்கும், மத்திய பாஜக, மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடையே பெரும் கருத்து மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு தமிழக அரசிற்கு வழங்க வேண்டிய புயல் நிவாரண நிதி, வெள்ள பாதிப்பு நிதிகளை வழங்க மறுத்து வருவதோடு மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்க வற்புறுத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா சாலைக்கு வர பாஜக அண்ணாமலைக்கு தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில்
அண்ணா சாலைக்கு வர நான் தயார் . இடத்தை குறிப்பிடுங்கள்; தனியாக வருகிறேன்; நீங்கள் தடுத்து நிறுத்திப் பாருங்கள் என்று இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.
அறிவாலயத்திற்கு வருவதாக சொன்ன அண்ணாமலை தைரியம் இருந்தால் அண்ணா சாலை வரட்டும் என கூறியிருந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பதில் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் பாஜக மற்றும் திமுகஇடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு தொண்டர்களிடையே
மோதல்போக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!