by Vignesh Perumal on | 2025-06-30 02:15 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நாட்களில் மூன்று வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (வார்டு எண்: 210) ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். அதேபோல் பழனி அரசு மருத்துவமனை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். கொடைக்கானல் அரசு மருத்துவமனை ஒவ்வொரு மாதமும் கடைசி வியாழக்கிழமைகளில் நடைபெறும்.
மேலும், இந்த முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!