by admin on | 2025-02-17 05:19 PM
தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவன் விக்னேசு கடந்த (13.02.25) ல் கல்லூரி விடுதியிலேயே இரத்தம் கொட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மாணவன் இறந்தது தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
விசாரணைக்கு முன்னரே வதந்திகளை முடிவுகளாக அறிவிக்கும் விசாரணை அதிகாரிகாவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போடி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுனில் ஆகியோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு - குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் விக்னேசுன் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17.02.25, காலை 10 மணிக்கு, தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து சனநாயக முற்போக்கு இயக்கங்கள்& கட்சிகள்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.