by admin on | 2025-06-29 11:17 AM
*கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்: கூடுதலாக 3 தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு*
தமிழகம் முழுவதும் ஜூலை 15ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் இந்த முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், ஜூலை மாதம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததுகாலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அரசு துறைகளில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் குடும்பங்களை சேர்ந்த பெண்களும், தகுதியானவர்கள் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.முத்துக்காமாட்சி எடிட்டர். 9842337244
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!