by Satheesh on | 2025-06-27 04:48 PM
திண்டுக்கல்: வேடசந்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வசந்தம் நகர் பகுதியில் சதீஷ்குமார் என்பவரின் பேக்கரி குடோனில் பதுக்கி வைத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த ரத்தினவேலு, சீனிவாசன், சுப்பையா, அக்பர்அலி, ராஜன், உமர்பாரூக்,அன்சாரி ஆகிய 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,55,000 மதிப்புள்ள 1,550 அஸ்ஸாம் மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநில லாட்டரி சீட்டுகளை கரூரில் பாண்டியன் என்பவரிடமிருந்து இருந்து வாங்கி வந்து இங்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது.
செய்தியாளர் : N சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !