by admin on | 2025-02-17 04:43 PM
தமிழகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையினர் பணியில் இல்லை. இருந்த போதிலும் தற்பொழுது பணியாற்றி வருகின்ற காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர். இவர்கள் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கின்ற பொழுது அரசு பேருந்துகளில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்து துறை கண்டித்து பெரும் அமலில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச பாஸ் வழங்க
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் போலீசாருக்கு இலவச பஸ் பாஸ் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வழங்கினார். இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் பணியின்போது பேருந்தில் பயணம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவசபேருந்து ஸ்மார்ட் கார்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், மாவட்ட காவல் துறையினருக்குவழங்கினார்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!