by admin on | 2025-02-17 01:32 PM
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பணம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. மக்களின் மன ஓட்டங்களை தெரிந்து கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பணங்களை பெற்று ஏமாற்றி வருகின்றனர். ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறுவதற்கு காரணம் ஆசையே? கூடுதல் வட்டி தருகின்றோம் கூடுதல் பணம் தருகின்றோம் என்று கூறும்போது இவர்களால் எப்படி தர முடியும் என்று யோசிக்காமல் பணத்தை டெபாசிட் செய்துவிட்டும் கொடுத்துவிட்டு பிறகு பணம் திருப்பி கிடைக்கவில்லை என்று ஐயோ, ஐயோ என்று கதறுவதும் காவல்துறையில் புகார் செய்வதும் வேடிக்கையாகவாடிக்கையாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த டெய்சிராணி என்பவர்
தஞ்சாவூர் சேர்ந்த ராபர்ட் என்பவர் தான் பாஸ்டராக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து தனக்குபல்வேறு வழிகளில் பணம்வருவதாகவும்தாங்கள்எனக்கும்தரும் பணத்திற்கு இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி பல்வேறு தவணைகளாக ரூ.6,22,000 பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறி புகார் மனுஅளித்துள்ளார்.மேலும் இதே போன்று திண்டுக்கலை சேர்ந்தபல்வேறு நபர்களிடம் மோசடிசெய்திருப்பதாகமனுவில் தெரிவித்துள்ளனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!