by admin on | 2025-02-17 01:01 PM
சில ஆண்டுகளாக மனித நேயம் என்பது மரத்துப் போய்விட்டது. இயலாதவர்களுக்கு ஓடி ஓடி சென்று உதவி செய்த காலம் மாறி வேடிக்கை மட்டும் பார்த்துச் செல்லும் நாகரீக உலகத்தில் மனிதநேயத்தோடு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மூதாட்டி ஒருவரை அழைத்துச் செல்லும் அற்புதமான காட்சி.....!!!!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நடக்க முடியாத மூதாட்டியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கை தாங்கலாக அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் அற்புதமான காட்சி காட்சி. மனிதநேய காவலருக்கு சல்யூட்...!!!
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.