| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்ட பூசாரி தற்கொலை......?????? நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்.... !!!???

by admin on | 2025-02-15 05:36 PM

Share:


அறநிலையத் துறையால் வெளியேற்றப்பட்ட பூசாரி தற்கொலை......?????? நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்.... !!!???

அறநிலையதுறையால் வெளியேற்றப்பட்டகோவில்_பூசாரிதற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில் பூசாரியாக பணி செய்து வந்த பூசாரி வே_ஐயப்பன்_பிள்ளை நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.இதற்கு மூலக்காரணம் அவரை கற்குவேல் அய்யனார் கோவிலில் பூஜை செய்ய விடாமல் தடுத்தத அறநிலைய துறை அதிகாரிசெயல் அலுவலர் சட்ட நுணுக்கங்களை வைத்து 160 வருடங்களுக்கு மேலாக ஊழியம் செய்து வந்த பூசாரிகளை வெளியே தள்ளினார்.. 

இதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்த பூசாரிகளில் ஒருவரான ஐயப்பன் அவர்கள், தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்...

இன்றைக்கு அவரது மனைவியும், குழந்தைகள் இரண்டு பேரும் வசிக்க வீடு , உண்ண உணவு, உடுக்க உடை கூட இல்லாமல் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

ஆறு மாதத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழக்க வைத்த அறநிலைய துறை செயல் அலுவலர் அதிகாரி மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வறுமையில் வாடும் மற்ற பூசாரிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment