by admin on | 2025-02-15 05:36 PM
அறநிலையதுறையால் வெளியேற்றப்பட்டகோவில்_பூசாரிதற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில் பூசாரியாக பணி செய்து வந்த பூசாரி வே_ஐயப்பன்_பிள்ளை நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.இதற்கு மூலக்காரணம் அவரை கற்குவேல் அய்யனார் கோவிலில் பூஜை செய்ய விடாமல் தடுத்தத அறநிலைய துறை அதிகாரிசெயல் அலுவலர் சட்ட நுணுக்கங்களை வைத்து 160 வருடங்களுக்கு மேலாக ஊழியம் செய்து வந்த பூசாரிகளை வெளியே தள்ளினார்..
இதனால் தனது வாழ்வாதாரத்தை இழந்த பூசாரிகளில் ஒருவரான ஐயப்பன் அவர்கள், தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்...
இன்றைக்கு அவரது மனைவியும், குழந்தைகள் இரண்டு பேரும் வசிக்க வீடு , உண்ண உணவு, உடுக்க உடை கூட இல்லாமல் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.
ஆறு மாதத்துக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழக்க வைத்த அறநிலைய துறை செயல் அலுவலர் அதிகாரி மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வறுமையில் வாடும் மற்ற பூசாரிகளை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்.
எ
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!