by admin on | 2025-02-15 01:34 PM
தேனி அருகே ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி: உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்தனர்.
தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி கே. கே. நகர் பகுதியில், தார் சாலை அமைக்கும் படி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து, ரூபாய் 1 கோடியே 60 லட்சம் நிதி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மணிமாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தார் சாலை பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர், அரசு ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!