by admin on | 2025-02-13 07:54 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் , தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது : "பஞ்சமி நிலத்தை நான் வாங்கியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு நிலமற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் தான். பஞ்சமி நிலமல்ல. நான் விலைக்கு வாங்கிய நிலத்தை, அதே நபரிடம் திரும்ப ஒப்படைத்து விட்டேன். எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் இருந்து எனக்கு எந்தவிதமான சம்மனும் இல்லை.அதிமுகவில் நான், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் கூக்குரலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அதிமுகவில் இணைவதற்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு தான் இவ்வாறு பேசினார்.
நிருபர்
சதீஷ்குமார் தேனி.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!