by admin on | 2025-02-12 03:53 PM
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி பெரியகுளம் போடி கம்பம் வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனிமவளக்கொள்ள என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. குறிப்பாக அனுமதி பெற்ற அளவை விட கூடுதல் திறன் கொண்ட வெடி மருந்துகளை பயன்படுத்தி கனிம வளங்களை வெட்டி எடுத்து கூடுதல் விலைக்கு கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் பேரில் பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் அவர்கள் ஆண்டிபட்டி பெரியகுளம் பகுதியில் கல்குவாரிகளில் ஆய்வு செய்து அனுமதி பெற்ற அளவைவிட முறைகேடாக கூடுதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ
நூறு கோடிக்கு மேல் கல்குவாரிகளுக்கு அபராதம் விதித்தார். ஆனால்
இதை தடுக்க வேண்டிய கனிமவளத்துறை மாவட்ட அதிகாரிகள் தாசில்தார்கள் மற்றும் போலீசார் ஆகியோர் பெறுவதைப் பெற்றுக் கண்டு கொள்வதில்லை. இதனால் கனிம வள கொள்ளையர்கள் தங்கள் விருப்பம் போல் கனிம வளங்களை வெட்டி எடுத்து கேரளாவிற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறிய வட்டாட்சியர் உட்பட ஏழு பேரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கை தேனி கலெக்டர் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரி வருகின்றனர். கலெக்டர் ஷஜிவனா அவர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஆர்வம் காட்ட வில்லை. எனவே புதிதாக பொறுப்பு ஏற்க உள்ள கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்கள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிம கொள்ளையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முன் வருவாரா???
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!