by Vignesh Perumal on | 2025-06-13 04:24 PM
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், குறிப்பாக இரண்டாவது தளத்தில் உள்ள வார்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும் நோயாளிகள் குமுறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு, இரண்டாவது தள வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவறைகளில் தண்ணீர் வசதி இல்லாததால், கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இது நோயாளிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற சுகாதாரப் பொருட்கள் எங்கே செல்கின்றன என்பது தெரியவில்லை என்றும், அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி கழிவறைகளை சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலை, மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், இந்த சுகாதார சீர்கேடு குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, கர்ப்பிணித் தாய்மார்களின் நலனை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், மருத்துவமனையில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், இது கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!