by admin on | 2025-02-11 01:42 PM
திருமுல்லைவாயலில் 1.68 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
திருமுல்லைவாயில் சிடிஎச் சாலையை ஒட்டி கணக்கன்குட்டை என்ற நீர்நிலை புறம்போக்கு இருந்தது. இதை 11 தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஆட்சியர் பிரதீப், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில் கடந்த திங்கள்கிழமை அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்பார்வை செய்தனர். திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் . மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!