by admin on | 2025-02-11 01:42 PM
திருமுல்லைவாயலில் 1.68 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
திருமுல்லைவாயில் சிடிஎச் சாலையை ஒட்டி கணக்கன்குட்டை என்ற நீர்நிலை புறம்போக்கு இருந்தது. இதை 11 தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதன்படி ஆட்சியர் பிரதீப், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில் கடந்த திங்கள்கிழமை அரசு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மேற்பார்வை செய்தனர். திருமுல்லைவாயில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர் . மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!