by admin on | 2025-02-11 09:21 AM
தேனி மாவட்டம் வேதானப்பட்டி மெயின் ரோட்டில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு பாலகிருஷ்ணசாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 24 தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்ற புனர்பூசம் நட்சத்திரம் தினமான இன்று வருடாபிஷேகம் விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில் கும்ப பூஜை ,சுதர்சன யாகம் சுவாமிக்கு மஞ்சள் பால் இளநீர் தயிர் பன்னீர் உள்ளிட்ட அனைத்து அபிஷேகங்களும் செய்து திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சர்வ சாதகர் வண்டியூர் வீரராகவ பெருமாள் திருக்கோயில் சுந்தராஜன் பட்டர் கலந்து கொண்டு பூஜை செய்தார். பெரியகுளம் பழனிவேல்ராஜன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் வருகை புரிந்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் உதயன் ராயேஸ்வரன் செய்திருந்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம். தேனி மாவட்டம்
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!