by admin on | 2025-02-11 09:21 AM
தேனி மாவட்டம் வேதானப்பட்டி மெயின் ரோட்டில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு பாலகிருஷ்ணசாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஜனவரி 24 தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்ற புனர்பூசம் நட்சத்திரம் தினமான இன்று வருடாபிஷேகம் விழா நடைபெற்றது . நிகழ்ச்சியில் கும்ப பூஜை ,சுதர்சன யாகம் சுவாமிக்கு மஞ்சள் பால் இளநீர் தயிர் பன்னீர் உள்ளிட்ட அனைத்து அபிஷேகங்களும் செய்து திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.சர்வ சாதகர் வண்டியூர் வீரராகவ பெருமாள் திருக்கோயில் சுந்தராஜன் பட்டர் கலந்து கொண்டு பூஜை செய்தார். பெரியகுளம் பழனிவேல்ராஜன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் வருகை புரிந்த அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் உதயன் ராயேஸ்வரன் செய்திருந்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நிருபர் சதீஷ்குமார் பெரியகுளம். தேனி மாவட்டம்
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!