by Vignesh Perumal on | 2025-06-09 11:29 AM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மா விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் சங்கம் சார்பில் மாம்பழ விலை வீழ்ச்சி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாம்பழங்களை தரையில் கொட்டி நூதனப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாம்பழ உற்பத்தி அமோகமாக இருந்தபோதிலும், மாம்பழங்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விலை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்களின் உழைப்புக்கும் முதலீட்டுக்கும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல், மரங்களிலேயே அழுகும் நிலையும், குறைந்த விலைக்கு விற்பதால் பெரும் நஷ்டமும் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
அரசு தலையிட்டு மாம்பழங்களுக்கு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். மாம்பழக் கூழ் (பல்ப்) கலக்காமல் ஜூஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நிறுவனங்கள் 20% கூட மாம்பழக் கூழைப் பயன்படுத்தாமல் ரசாயனங்களை வைத்து ஜூஸ் தயாரிப்பதால், உண்மையான மாம்பழ ஜூஸுக்கான தேவை குறைந்து, மாம்பழங்களின் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மா சாகுபடி செய்யும் குத்தகைதாரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மாம்பழங்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்கு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்து, தாங்கள் விளைவித்த மாம்பழங்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உடனடியாக அரசு தங்களின் கோரிக்கைகளை ஏற்று, மாம்பழ விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர். பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!