by admin on | 2025-02-09 09:44 PM
மதுரை மாவட்டம் பரவை அருகே.சிறுவாலை ஜமீனைசேர்ந்த அம்பலத்தாடி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் மற்றும் செல்வவிநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில்கள் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்தாண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்தநிலையில்
கடந்த பிப்.8.ந்தேதி மாலை 4.30.மணியளவில்
சிவாசாரியார்கள் கணேசன்.மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன் முதல்கால யாகசாலை தொடங்கியது.
தொடர்ந்து வேதமந்திரங்கள் ஓதப்பட்டு பின்னர் நேற்று
இரண்டாம் கால யாகசாலையில் மஹா பூர்ணாஹூதி பூஜைகள் நடந்தேறியது.
இதன்பின்னர் யாகசாலையிலிந்து கடம் புறப்பபாடாகி திருகோவிலை வலம் வந்து பின்னர். காலை 11.மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறி தீபாரதனைகள் காட்டப்பட்டது
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. பக்தர்கள் மீது புனித நிர் தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.அன்று
இரவு 7.மேணியளவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்பலத்தாடி கண்மாயில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வவிழா ஏற்பாடுகளை கிராம முதன்மைக்காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
நிருபர்.தங்க சுரேஷ் வாடிப்பட்டி. மதுரை.
.
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!