by Vignesh Perumal on | 2025-06-08 04:25 PM
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றியத்தில், புரட்சித்தமிழர் எடப்பாடியார் தலைமையேற்று, முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான டாக்டர். சி. விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.ம.மு.க., ஐ.ஜே.கே உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று இணைந்தனர்.
கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, புதுக்கோட்டை அரசியல் களத்தில் அ.தி.மு.க-வின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்தது.
புதிதாக அ.தி.மு.க-வில் இணைந்த அனைவரையும் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் வேட்டி அணிவித்து அன்புடன் வரவேற்றார். அ.ம.மு.க கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், ஆறுமுகம், ரமேஷ், பன்னீர், முருகேசன், தானீஸ்லாஸ், பாஸ்கரன், பழனிவேல், ராஜசேகர், தமிழரசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா, கறம்பக்குடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முத்துக்குமார், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இந்த இணைப்பு விழா, எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு அ.தி.மு.க-வின் அடித்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடியார் தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு மேலும் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.