by admin on | 2025-02-09 08:49 PM
இந்து சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் அர்ச்சகர்கள் தெய்வங்களுக்கு தீப ஆராதனை காட்டிய பிறகு பக்தர்களுக்கு தீபம் காட்டக் கொண்டு வரும்போது தீப ஆராதனை ஏற்றுக் கொண்டு பக்தர்கள் தீப ஆராதனை தட்டில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு பக்தர்கள் தட்டில் வழங்கும் காணிக்கைகளை அச்சகர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம். இந்நிலையில்
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது
பணத்தை வாங்கி உண்டியலில் போட வேண்டும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர் இதனால் அர்ச்சகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்