by admin on | 2025-02-09 01:55 PM
கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கைதி இறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம் என்பவர் சிறைக்குள் தன் உயிருக்கு ஏதேனும்ஆபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதி விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறுவது என்னுடன் இருந்த கைதியை கொலைசெய்து விட்டார்கள் எனவும்,அடுத்தது நான் தான் எனக்கு எது நடந்தாலும்,சதீஷ், கிருபாகரன், பாலு, மோகன்ராம் எனகுறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள பெயர்கள் கோவை மத்திய சிறை சாலையில் பணி புரியும் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல ஆண்டுகளாக கோவைமத்தியசிறைச்சாலையில்தொடர்ந்துபணியாற்றுவதாக கூறப்படுகிறது. கைதி விக்ரம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது .இது குறித்து கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு தனது குடும்பத்தார் மற்றும் வழக்கறிஞளுடன் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோ காட்சி எப்படி வெளியானது என கேள்வி எழுந்துள்ளது.
நிருபர் சதீஷ்குமார் தேனி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!