| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்..! குவியும் பாராட்டுக்கள்...!

by Vignesh Perumal on | 2025-06-07 09:40 AM

Share:


அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்..! குவியும் பாராட்டுக்கள்...!

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 900 மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, எஸ்.ஆர். பொது நல அறக்கட்டளை சார்பில் ₹1.70 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இன்று வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அறக்கட்டளையின் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.ஆர். ராமசந்திரன் திறந்து வைத்து, மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தார்.

இந்த நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.ஆர். பொது நல அறக்கட்டளையின் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர் குமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, அறக்கட்டளையின் சமூக சேவையைப் பாராட்டினர்.


எஸ்.ஆர். பொது நல அறக்கட்டளை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் இதுபோன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னெடுப்பு, அரசுப் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment