by Vignesh Perumal on | 2025-06-06 11:55 AM
தமிழக காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து காவல் பிரிவு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காவலர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சீருடையில் இருக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிரக் கூடாது.
காவல்துறை சீருடை என்பது பொதுச் சேவைக்கான அடையாளம். அதை தனிப்பட்ட பிரபலத்திற்கோ, பொழுதுபோக்கிற்கோ பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த உத்தரவு வலியுறுத்துகிறது.
காவல் துறையினர் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் நிகழ்ச்சிகள் அல்லது பிற பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பினால், அதற்கான முன் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.
இந்த உத்தரவானது, காவல் துறையின் ஒழுக்கம், கண்ணியம் மற்றும் மாண்பைப் பாதுகாக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சீருடையுடன் தனிப்பட்ட பதிவுகள் வெளியிடுவது, காவல் துறையின் பொது பிம்பத்தைப் பாதிக்கலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம், தமிழக காவல்துறையினர் சமூக வலைதள பயன்பாட்டில் மேலும் கட்டுப்பாடுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
திண்டுக்கல் அருகே தோட்டத்து வீட்டில் பயங்கரம்...! பெரும் பரபரப்பு...!