by admin on | 2025-02-08 07:31 PM
திண்டுக்கல் மாவட்டம் பழனி உட்கோட்டம் காவல் D S P தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் அவர்களின் அறிவுரையின்படி கீரனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நவீன்குமார் தைப்பூச திருவிழாவிற்காக பழனி மலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக இரவு 10 மணிக்கு மேல் நடந்து வரும் பாதையாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு குறித்து, இரவு நேரங்களில் முடிந்த அளவு நடைப்பயணத்தை தவிர்க்கவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதையில் நடந்து செல்லவும், இரவு நேரங்களில் ஒளிரும் பட்டை அணிந்த சட்டை அணிந்தும், ஒளிரும் பட்டை வைத்த குச்சிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான நடை பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிருபர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.