| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

அரசியல் பிரமுகர் தலைமையில்..! அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்...!

by Vignesh Perumal on | 2025-06-05 07:51 PM

Share:


அரசியல் பிரமுகர் தலைமையில்..! அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்...!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா பனையப்படி அருகேயுள்ள கும்மங்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன கருப்பர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூன் 5, 2025) கோலாகலமாக நடைபெற்றது. காசி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கும்ப கலசத்தில் வைத்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக வைபவம் சிறப்பாக நடந்தது.

காலை முதல் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜைகள், கோ பூஜை, நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தனம் சாத்துதல் எனப் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க, புனித நதிகளான காசி மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கும்ப கலசங்களில் நிரப்பப்பட்டு, மேள தாளங்கள் முழங்க கோபுர விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், மகா பூர்ணாஹுதிக்குப் பிறகு, கோபுர கலசங்களுக்குச் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்தினர். அதைத் தொடர்ந்து, மூலவர் ஸ்ரீ சின்ன கருப்பருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வில், தமிழக முன்னாள் அதிமுக வீட்டு வசதி வாரியத் தலைவரான பி.கே. வைரமுத்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருடன் அப்பகுதி பொதுமக்களும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்று ஸ்ரீ சின்ன கருப்பரின் அருளைப் பெற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்தக் கும்பாபிஷேக நிகழ்வு கும்மங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்மிகச் சூழலை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.




செய்தி- பழனியப்பன் புதுக்கோட்டை 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment