by Satheesh on | 2025-06-05 04:44 PM
திண்டுக்கல் : பழனி நகர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் 2 நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிவதாக D S P தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது புது தாராபுரம் ரோடு ரயில்வே கேட் அருகே பெரிய வாள் மற்றும் பெரிய வீச்சருவாளுடன் நின்று கொண்டு பொதுமக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் வாளை சுழற்றி அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசிக் கொண்டிருந்த பழனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் தமிழ்ச்செல்வன், வேல்முருகன் மகன் ராமர் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பெரியவாள், பெரிய வீச்சரிவாள் ஆகிய 2 பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.