| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

ரயிலில் செல்லும் கர்ப்பிணி பெண்களே உஷார்....!!

by admin on | 2025-02-08 03:22 PM

Share:


ரயிலில் செல்லும் கர்ப்பிணி பெண்களே உஷார்....!!

இரயிலில் செல்லும் கர்ப்பிணி பெண்களே உஷார்...! 


ஓடும் இரயிலில் பாலியல் துன்புறுத்தலால் கருவிலேயே உயிரிழந்த குழந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.


வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் இச்சைக்கு ஆளாக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றிலேயே இருந்த குழந்தை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 


இதைத்தொடர்ந்து, தாயையும் சிசுவையும் அடுக்கம்பாறை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம், உயிரிழந்த சிசுவை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கருவிலேயே சிசு பலியானதால் பெண்ணின் மொத்த குடும்பத்தினரும் மருத்துவமனையில் கதறி அழுதக் காட்சி அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


அதுமட்டுமின்றி, இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஹேமராஜ் என்பவரை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்  

என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment