by admin on | 2025-02-08 02:46 PM
குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபர் கைது.
திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளை குறிவைத்த கொள்ளையர்கள், பூட்டை உடைத்து வீடுகளுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி.இலக்கியா தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம்(24) என்பவரை மத்தியபிரதேசம் சென்று கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!