by admin on | 2025-02-08 02:46 PM
குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பில் 70 சவரன் கொள்ளையடித்த வழக்கில் வடமாநில வாலிபர் கைது.
திண்டுக்கல், குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளை குறிவைத்த கொள்ளையர்கள், பூட்டை உடைத்து வீடுகளுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி.இலக்கியா தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம்(24) என்பவரை மத்தியபிரதேசம் சென்று கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படம் செய்தி நன்றி : மோகன் கணேஷ் திண்டுக்கல்
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!