by Satheesh on | 2025-06-02 09:36 PM
பள்ளி திறந்த முதல்நாளே பள்ளி சீருடையில் மதுபானம் வாங்கி செல்லும் மாணவர்
கன்னியாகுமரி : நாகர்கோவில் பள்ளி திறந்த முதல் நாளே பள்ளி சீருடையில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையில் மதுபானம் வாங்கிச் செல்லும் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவன் ஒருவன் பகிரங்கமாக, பொதுவெளியில், பட்டப் பகலில் அதுவும் பள்ளிச்சீருடையில் அரசு மதுபான கடைக்கு சென்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் பள்ளிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளதே காரணம் என பரவலாக பேசப்படுகிறது. பள்ளி சீருடை அணிந்த மாணவருக்கு மதுபானத்தை விற்பனை செய்த விற்பனையாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், மதுபான கடைகளை குறைக்கவும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபான கடைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
யார் யாருக்கு சீட்? அதிரடி காட்டும் எடப்பாடி ! கலக்கத்தில் கட்சியினர் !!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி வாழ்த்து ! சர்ப்ரைஸ் கொடுத்த சப் கலெக்டர் !!
+2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த கொடூரம் ! பெரும் அதிர்ச்சி !!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...! தனியார் பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 25 வரை...! திடீர் விடுமுறை...!
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!