by admin on | 2025-02-07 11:32 AM
திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமாரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியின் உறவினர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க உடனடியாக களம் இறங்கிய போலீசார்
தனியார் பள்ளி தாளாளர் சுதா உட்பட பள்ளி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தனர். பள்ளி வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் மாணவி புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவியின் உறவினர்கள் அதே பள்ளிக்கு சொந்தமான மெட்ரிகுலேஷன் பள்ளியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மாதா பிதா குறு என்று மிகவும் உயரிய மதிப்போடு அழைக்கப்படுகின்ற ஆசிரியர் சமுதாயத்தில் பள்ளி தாளாளர் என்ற கர்வத்தோடு இந்த இச்சை செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.
நிருபர் சதீஷ்குமார் தேனி.
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!