by admin on | 2025-02-06 07:30 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ-யை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம், பெண் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. அங்கு பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிப்பதற்காக வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் வந்திருந்தார். அவர் எஸ்.ஐ., பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் தகராறாக மாறி எஸ்.ஐ., தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.ஐ., பிரணிதா கூறியதாவது:
வி.சி.க.,நிர்வாகி இளைய கவுதமன்போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த நிலையில் என்னைமிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையை கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்குஎதிராக போராட்டம் நடத்துவேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்'' என்றார்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!