by admin on | 2025-02-06 07:30 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ-யை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக கூறப்பட்ட சம்பவம், பெண் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை, காரைக்குடி அருகே சோமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருபவர் பிரணிதா. அங்கு பிரச்னை தொடர்பாக புகார் மனு அளிப்பதற்காக வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் வந்திருந்தார். அவர் எஸ்.ஐ., பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்ததாகவும், பின் தகராறாக மாறி எஸ்.ஐ., தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.ஐ., பிரணிதா கூறியதாவது:
வி.சி.க.,நிர்வாகி இளைய கவுதமன்போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்த நிலையில் என்னைமிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை கீழே தள்ளிவிட்டு சட்டையை கழட்டி விடுவேன். போஸ்டர் ஒட்டி விடுவேன். உனக்குஎதிராக போராட்டம் நடத்துவேன் என்றார். இதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளேன்'' என்றார்.
பறக்கும் படை அதிரடி...! உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.01 லட்சம் பறிமுதல்...!
கந்த சஷ்டி கவசம் மறைப்பு - பக்தர்கள் அதிர்ச்சி ! இந்து அமைப்புகள் எதிர்ப்பு !! கொடைக்கானலில் பரபரப்பு !!!
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!