by Muthukamatchi on | 2025-05-29 05:35 PM
நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அன்பு இல்லத்தில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தொடக்க விழாவை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் தலைமையில் பூமி பூஜை விழா நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் இணை ஆணையர் மாரிமுத்து உடன் இருந்தனர்.
நிருபர்கள் பாலாஜி, கதிரேசன் பழனி